Sunday, November 27, 2011

நியூயார்க் நகரம்..

படம்: சில்லுனு ஒரு காதல் 
இசை : A . R  . ரஹ்மான்
கவிஞர்: வாலி
பாடியவர்
  : A . R  . ரஹ்மான் 


நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது .. பனியும் படர்ந்தது ..

கப்பல் இறங்கியே காற்றும் தரையில் நடந்தது .. 
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்..தனிமை தனிமையோ..??
தனிமை தனிமையோ.. கொடுமை கொடுமையோ ..  ??

பேச்சினால் தாலாட்டு பாடி என்னை உறங்க வைக்க நீ இல்லை..
தினமும் ஒரு முத்தம் தந்து காலை coffee கொடுக்க நீ இல்லை ..
விழியில் விழும் தூசி தன்னை எடுக்க நீ இங்கு இல்லை ..
மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க நீ இங்கே இல்லை..

நான் இங்கே நீயும் அங்கே இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷம் ஆனதேனோ ???
வான் இங்கே நீலம் அங்கே இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ ???

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது .. பனியும் படர்ந்தது ..
கப்பல் இறங்கியே காற்றும் தரையில் நடந்தது .. 
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்..தனிமை தனிமையோ..??
தனிமை தனிமையோ.. கொடுமை கொடுமையோ ..  ??

நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா.. 
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரில் உள்ளதென்ன தேனா ??

சில்லென்று பூமி இருந்தும் இந்த தருணத்தில் குளிர் காலம் கோடை ஆனதேனோ ??
வா அன்பே நீயும் வந்தால் செந்தணல் கூட பனிக்கட்டி போல மாறுமே..

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது .. பனியும் படர்ந்தது ..
கப்பல் இறங்கியே காற்றும் தரையில் நடந்தது .. 
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்..தனிமை தனிமையோ..??
தனிமை தனிமையோ.. கொடுமை கொடுமையோ ..  ?? 

Saturday, February 19, 2011

எங்கேயும் காதல் ..

படம்: எங்கேயும் காதல்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
கவிஞர்: தாமரை
பாடியவர்
கள்  : ஆலாப் ராஜு


எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
வெண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
பொல்லாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல் வரும் காதல்.. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..

காதல் எனும் தேனே . கடல் அலைகளில் காணும் நீலம் நீயே ..
வானே .. வண்ண மீனே .. மழை வெயில் என நான்கு காலம் நீயே ..

கடற்கரையில்.. அதன் மணல் வெளியில்.. அக்காற்றோடு காற்றாக ..
பல குரல்கள் பல பல விரல்கள் தமை பதிவு செய்திருக்கும்..

விடியலிலும்.. நடு இரவினிலும்.. இது ஓயாதே ஓயாதே ..
சிரிப்பினிலும்.. பல சிணுங்கலிலும்.. மிக கலந்து காத்திருக்கும் ..

ஓ பார்க்காமல்.. கொஞ்சம் பேசாமல் போனாலும் ..
உள்ளம் தாங்காது.. தாங்காதே .. 
கண்கள் தான் பின்பு தூங்காதே ..

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
வெண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
பொல்லாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல் வரும் காதல்.. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..

அடம்பிடிக்கும்.. இது வடம் இழுக்கும்.. யார் சொன்னாலும் கேட்காதே ..
தர மறுக்கும் .. பின் தலை கொடுக்கும் .. இது புரண்டு தீர்த்திடுமே ..

முகங்களையோ.. உடல் நிறங்களயோ.. இது பார்க்காதே பார்க்காதே ..
இரு உடலில் ஒரு உயிரிருக்க அது முயன்று பார்த்திடுமே ..

யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் உண்டாகும் ..
பூச்செண்டாய் பூமி திண்டாடும் ..

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
வெண்காலை  சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
பொல்லாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல் வரும் காதல்.. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..

காதல் எனும் தேனே . கடல் அலைகளில் காணும் நீலம் நீயே ..
வானே வண்ண மீனே .. மழை வெயில் என நான்கு காலம் நீயே ..






Monday, February 14, 2011

என்னமோ ஏதோ..



படம்: கோ
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
கவிஞர்: மதன் கார்கி
பாடியவர்
கள்  : ஆலாப் ராஜு, பிரசாந்தினி, ஸ்ரீசரண், எம்சீ ஜாஸ்



என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம் பிறழுது நினைவில்..
கண்கள் இருளுது நனவில்!!

என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்..
மொட்டு அவிழுது கொடியில்!!

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை!!

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை!! 

என்னமோ ஏதோ மின்னி மறையுது விழியில்..
அண்டி அகலுது வழியில்.. 
சிந்திச் சிதறுது விழியில்!! 

என்னமோ ஏதோ சிக்கித் தவிக்குது மனதில் ..
றெக்கை விரிக்குது கனவில்.. 
விட்டுப் பறக்குது தொலைவில்!! 

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை!!
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை!! 

நீயும் நானும் யந்திரமா?
யாரோ செய்யும் மந்திரமா? 
பூவே.. 

முத்தமிட்ட மூச்சுக் காற்று பட்டு பட்டு கெட்டுப் போனேன்.. 
பக்கம் வந்து நிற்கும் போது திட்டமிட்டு எட்டிப் போனேன்.. 

நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்.. 
அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் அச்சாகும்..
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்!

ஏதோ .. எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம் பிறழுது நினைவில்..
கண்கள் இருளுது நனவில்!!

என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்..
மொட்டு அவிழுது கொடியில்!!


நீயும் நானும் யந்திரமா?
யாரோ செய்யும் மந்திரமா?
பூவே.. 

எங்களின் தமிழச்சி 
என்னமோ ஏதோ you're lookin so fine,
மறக்க முடியலையே என் மனமின்று ..
உன் மனசோ lovely இப்படியே இப்ப, 
உன்னருகில் நான் வந்து சேரவா என்று..

Lady lookin like a cindrella cindrella..
Naughty looku விட்ட தென்றலா?
Lady lookin like a cindrella cindrella..
என்னை வட்டமிடும் வெண்ணிலா..

சுத்தி சுத்தி உன்னைத் தேடி.. 
விழிகள் அலையும் அவசரம் ஏனோ? 
சத்த சத்த நெரிசலில் உன் சொல்..
செவிகள் அறியும் அதிசயம் ஏனோ?

கனாக்கானத் தானே பெண்ணே  கண்கொண்டு வந்தேனோ? 
வினாக்கான விடையும் காணக் கண்ணீரும் கொண்டேனோ?
நிழலைத் திருடும் மழலை நானோ?

ஏதோ .. எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம் பிறழுது நினைவில்..
கண்கள் இருளுது நனவில்!!

ஓஹோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்..
மொட்டு அவிழுது கொடியில்!!

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை!!
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை!!