படம்: மாற்றான்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
எழுதியவர்: மதன் கார்கி
பாடியவர்கள்: ஜாவேத் அலி, மஹாலக்ஷ்மி ஐயர், நின்சி வின்சென்ட்
கால் முளைத்த பூவே.. என்னோடு Ballet ஆட வா வா !
நிலவுகள் தலைகள் குனிந்ததே ..
ஏ பெண்ணே.. ஏ பெண்ணே..
உன் வளைவுகளில் தொலைவது போலே உணருகிறேன்..
இடையினிலே திணறுகிறேன்.. கனவிது தானா? வினவுகிறேன்!
கால் முளைத்த பூவே.. என்னோடு Ballet ஆட வா வா !
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
எழுதியவர்: மதன் கார்கி
பாடியவர்கள்: ஜாவேத் அலி, மஹாலக்ஷ்மி ஐயர், நின்சி வின்சென்ட்
கால் முளைத்த பூவே.. என்னோடு Ballet ஆட வா வா !
Volga நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா !
Camomile பூவின் வாசமதை உன் இதழ்களில் கண்டேனே!
Soviet ஓவியக் கவிதைகளை உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்!
அசையும் அசைவில் மனதைப் பிசைய,
இதய இடுக்கில் மழையைப் பொழிய,
உயிரை உரசி அனலை எழுப்ப,
எரியும் வெறியைத் தெரித்தாய்!
வால் முளைத்த காற்றே.. என்னோடு Ballet ஆட வா வா!
Volga நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா !
நிலவுகள் தலைகள் குனிந்ததே ..
மலர்களின் மமதை அழிந்ததே..
கடவுளின் கடமை முடிந்ததே..
அழகி நீ பிறந்த நொடியிலே!
தலைகள் குனிந்ததோ? மமதை அழிந்ததோ?
கடமை முடிந்ததோ? பிறந்த நொடியிலோ?
ஏ பெண்ணே.. ஏ பெண்ணே..
உன் வளைவுகளில் தொலைவது போலே உணருகிறேன்..
இடையினிலே திணறுகிறேன்.. கனவிது தானா? வினவுகிறேன்!
கால் முளைத்த பூவே.. என்னோடு Ballet ஆட வா வா !
Volga நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா !
இரவினில் நிலவு எரிகையில், திரிகளாய் விரல்கள் திரிவதேன்?
அருகினில் நெருங்கி வருகையில், விலகியே ஒழுக்கம் உருகுதே..
நிலவு எரிகையில், விரல்கள் திரிந்ததோ?
நெருங்கி வருகையில், ஒழுக்கம் உருகுதோ?
ஓ ஏனேனோ, எனை ஏனோ, உருக்குகிறாய்..
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்..
இடைவெளியை சுருக்கிகிறாய்,
இரக்கமே இன்றி இறுக்குகிறாய்!
கால் முளைத்த பூவே.. என்னோடு Ballet ஆட வா வா !
இரவினில் நிலவு எரிகையில், திரிகளாய் விரல்கள் திரிவதேன்?
அருகினில் நெருங்கி வருகையில், விலகியே ஒழுக்கம் உருகுதே..
நிலவு எரிகையில், விரல்கள் திரிந்ததோ?
நெருங்கி வருகையில், ஒழுக்கம் உருகுதோ?
ஓ ஏனேனோ, எனை ஏனோ, உருக்குகிறாய்..
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்..
இடைவெளியை சுருக்கிகிறாய்,
இரக்கமே இன்றி இறுக்குகிறாய்!
கால் முளைத்த பூவே.. என்னோடு Ballet ஆட வா வா !
Volga நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா !
Camomile பூவின் வாசமதை உன் இதழ்களில் கண்டேனே!
Soviet ஓவியக் கவிதைகளை உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்!
அசையும் அசைவில் மனதைப் பிசைய,
இதய இடுக்கில் மழையைப் பொழிய,
உயிரை உரசி அனலை எழுப்ப,
எரியும் வெறியைத் தெறித்தாய்!