வெள்ளை கனவு
படம் : மெல்லிசை (2015)
இசை : சாம் C S
பாடியவர்கள் : ஹரிஹரன் , ஹரிணி
கவிஞர்: ரஞ்சித் ஜெயக்கொடி
படம் : மெல்லிசை (2015)
இசை : சாம் C S
பாடியவர்கள் : ஹரிஹரன் , ஹரிணி
கவிஞர்: ரஞ்சித் ஜெயக்கொடி
வெள்ளை கனவொன்று உள்ளே நுழைந்தது.. கண்கள் இருளதடி..
என் மொத்த புலன்களும் மெல்ல எழுந்து வந்து எதோ சொல்லுதடி ..
(Humming: அடி பெண்ணே.. பெண்ணே..)
கண் முன்னே தேவதை .. உயிர் எங்கும் பெரும் வதை..
பேசி தீர்த்த பின்பும் பேச வார்த்தை இன்னும் தேடுதே ..
இனி பேச ஏதுமின்றி கேட்க ஏதுமின்றி தொடருதே ..
(Humming: அடி பெண்ணே.. பெண்ணே..)
கண் முன்னே தேவதை .. உயிர் எங்கும் பெரும் வதை..
வெள்ளை கனவொன்று உள்ளே நுழைந்தது .. கண்கள் இருளதடி..
என் மொத்த புலன்களும் மெல்ல எழுந்து வந்து எதோ சொல்லுதடி...
மயக்கும் பார்வையில் பாதை மறந்தும் இந்த பயணம் தொடருதடி..
உன் மந்திர புன்னகையில் என் மனம் சொக்கி சொக்கி சொர்க்கம் தெரியுதடி..
புத்தம் புது மழை என்னை நனைத்ததே .. நெஞ்சம் மட்டும் வேர்க்கும் மாயமென்ன ?
நித்தம் இந்த மழை என்னை நனைத்திட..ஏனோ உள்ளம் ஏங்கும் நியாமென்ன?
இரு கரங்களியிடையே இருக்க இதமாகுதே ..
நீ விழுங்கும் சொற்கள் காதினோரம் கனமாகுதே..
(Humming: அடி பெண்ணே.. பெண்ணே..)
கண் முன்னே தேவதை .. உயிர் எங்கும் பெரும் வதை ..
உன் மூச்சு காற்று பட்டு ரோமக்கூட்டம் மொத்தம் சிலிர்க்குதே..
உன் தேகச்சூட்டில் என் உதடு கொஞ்சம் முத்தம் உதிர்க்குதே..
ஓ ஓ.. வெள்ளை கனவொன்று உள்ளே நுழைந்தது .. கண்கள் இருளதடி..
என் மொத்த புலன்களும் மெல்ல எழுந்து வந்து எதோ சொல்லுதடி ..
Humming: அடி பெண்ணே.. பெண்ணே..