படம் : பையா
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ராகுல் நம்பியார், சைந்தவி
கவிஞர்: நா. முத்துக்குமார்
பாடல் வரிகள் :
அடடா மழைடா அடைமழைடா!
அழகா சிரிச்சா புயல் மழைடா !!
மாறி மாறி மழையடிக்க, மனசுக்குள்ளக் குடைபிடிக்க ,
கால்கள் நாலாச்சுக் கைகள் எட்டாச்சு,
என்னாச்சு ஏதாச்சு , ஏதேதோ ஆயாச்சு;
மயில்தோகைப் போல இவ மழையில் ஆடும் போது,
ரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு;
என்னாச்சு எதாச்சு, ஏதேதோ ஆயாச்சு!
(அடடா)
பாட்டுப் பாட்டுப் பாடாதப் பாட்டு ,
மழை தான் பாடுது, கேட்காதப் பாட்டு ,
உன்ன என்னச் சேர்த்து வெச்ச மழைக்கொரு சலாம் போடு !
என்ன கொஞ்சம் காணலையே, உனக்குள்ளத் தேடி பாரு !
மந்திரம் போல இருக்கு, புது தந்திரம் போல இருக்கு ,
பம்பரம் போல எனக்கு, தல மத்தியில் சுத்துது கிறுக்கு ;
தேவதை எங்கே? என் தேவதை எங்கே ?
அது சந்தோஷமா ஆடுது இங்கே!
உன்னப் போல வேறாரும் இல்ல,
என்ன விட்டா வேறாரு சொல்ல;
சின்னச் சின்னக் கண்ணு ரெண்டக் கொடுத்தென்ன அனுப்பி வெச்சான்;
இந்தக் கண்ணுப் போதலையே எதுக்கு இவள படைச்சி வெச்சான்?
பட்டாம்பூச்சிப் பொண்ணு, நெஞ்சுப் படபடக்கும் நின்னு!
பூவும் இவளும் ஒண்ணு, என்னக் கொன்னுப்புட்டாக் கொன்னு!
போவது எங்கே? நான் போவது எங்கே?
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே !
அடடா மழைடா அடைமழைடா!
அழகா சிரிச்சா அனல் மழைடா !!
பிண்ணிப் பிண்ணி மழையடிக்க , மின்னல் வந்து படம்பிடிக்க
வானம் ரெண்டாச்சு , பூமித் துண்டாச்சு ,
என் மூச்சு காத்தால மழைக் கூட சூடாச்சு ;
பிடிய நீட்டி யாரும் , இந்த மழையத் தடுக்க வேணாம்;
அணையப் போட்டு யாரும் , என் மனச அடைக்க வேணாம்!!
கொண்டாடுக் கொண்டாடுக் கூத்தாடிக் கொண்டாடு!!
No comments:
Post a Comment