Friday, August 13, 2010

நீ ஒன்றும் அழகி இல்லை..

படம் : மாஸ்கோவின் காவிரி
இசை : தமன்
பாடியவர்கள் : நவீன் , ராகுல் நம்பியார்
கவிஞர்: வைரமுத்து

கவிதை :
நீ ஒன்றும் அழகி இல்லை..
ஆனால் எனக்கு உன்னை போல் இன்னொருத்தி அழகில்லை..
நீ ஒன்றும் வெள்ளை இல்லை..
ஆனால் எனக்கு உன்னை போல் கண் கூசும் வண்ணமில்லை ..
நீ ஒன்றும் உயரமில்லை..
ஆனால் உன்னை அண்ணார்ந்து பார்த்த தலை தாழவில்லை..
நான் தூங்காமல் இருந்ததில்லை..
ஆனால் பெண்ணே அக்டோபர் ஏழு முதல் தூங்கவில்லை ..

பாடல் :
நீ ஒன்றும் அழகி இல்லை..
ஆனால் எனக்கு உன்னை போல் இன்னொருத்தி அழகில்லை..
நீ ஒன்றும் வெள்ளை இல்லை..
ஆனால் எனக்கு உன்னை போல் கண் கூசும் வண்ணமில்லை ..
நீ ஒன்றும் உயரமில்லை..
ஆனால் உன்னை அண்ணார்ந்து பார்த்த தலை தாழவில்லை..
நான் தூங்காமல் இருந்ததில்லை..
ஆனால் பெண்ணே அக்டோபர் ஏழு முதல் தூங்கவில்லை ..

வந்ததடி வந்ததடி வந்ததடி காதல் ..
சிந்துதடி சிந்துதடி சிந்துதடி சீவல் ..
(நீ ஒன்றும்..)

கண்ணை பரிக்குதடி கண்ணை பரிக்குதடி
நித்தம் ஒரு மில்லி மீட்டர் வளர்கின்ற அழகு ..
நெஞ்சை துளைக்குதடி நெஞ்சை துளைக்குதடி
முடிவிட்டு வைத்தாலும் முட்டுகின்ற நிலவு ..
உன் கவனம் எந்தன் மார்பு துளைக்க ..
மௌனம் எந்தன் முதுகு துளைக்க..
எங்ஙனம் எங்ஙனம் வாழுவது ?
இன்னும் எத்தனை முறை தான் சாகுவது ?

நிலவை தின்று அமுதம் குடிக்கும் அனுபவம் தானே காதல் ..
இல்லை நெருப்பை தின்று தண்ணீர் குடிக்கும் அனுபவம் தானா காதல் காதல் காதல் ?

வந்ததடி வந்ததடி வந்ததடி காதல் ..
சிந்துதடி சிந்துதடி சிந்துதடி சீவல் ..

உள்ளம் கருகுதடி உள்ளம் கருகுதடி
உன்னுடைய பிம்பங்கள் கண் மறையும் பொழுது ..
தொல்லை பெருகுதடி தொல்லை பெருகுதடி
துப்பட்டா சில சமயம் தோளில் பறக்கும் பொழுது ..
ஆயிரம் சொற்கள் நெஞ்சில் பிறக்க ..
ஒவ்வொரு சொல்லாய் உதடு எரிக்க ..
எங்ஙனம் எங்ஙனம் பேசுவது ?
நம் இடைவெளி எப்படி தீருவது ?

நிலவை தின்று அமுதம் குடிக்கும் அனுபவம் தானே காதல் ..
இல்லை நெருப்பை தின்று தண்ணீர் குடிக்கும் அனுபவம் தானா காதல் காதல் காதல் ?

வந்ததடி வந்ததடி வந்ததடி காதல் ..
சிந்துதடி சிந்துதடி சிந்துதடி சீவல் ..
(நீ ஒன்றும்..)

ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி..

படம் : ஆதவன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஷஹில் ஹதா , சுதா ரகுநாதன் , ஆண்ட்ரியா
கவிஞர்: தாமரை

ஷஹில்:
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி பென்மேலே ..
தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே ..
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே ..
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளே போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தை தானா..
கூறாய் நீ கூறாய் உன்னை பூட்டி கொண்டாயே..
வாராய் வெளி வாராய் இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய்..
மாட்டாய் மாட்டாயே ..
(ஏனோ ஏனோ..)

ஷஹில்:
மௌனம் என்னும் சாட்டை வீசி என்னை கீறாதே ..
மாலை தென்றல் பட்டால் கூட காயம் ஆறாதே ..
அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம் ..
தேடல் கொஞ்சம் ஊடல் கொஞ்சம் நீயா பக்கம் ..

ஆண்ட்ரியா:
ஏதோ ஒன்று என்னை தள்ள நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்..
உன்னை மட்டும் எண்ணி எண்ணி நிலவை போலே நீ இல்லாமல் தேய்ந்தேன்..

rap:
i do i do.. i wanna really make it true..
just me and you.. get locked up in my room..
get a little bit fishy would fill me in..
gotta come a little back my friend..
you are my love you may love and you know what I
i'm just thinking about having some fun..

சுதா ரகுநாதன்:
நானும் நீயும் பேசும் போது தென்றல் வந்ததே ..
பேசி போட்ட வார்த்தை எல்லாம் அள்ளி சென்றதே ..
சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா ?
சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயா ?

ஷஹில்:
திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய் ..
காற்றை போலே தொட்டு தொட்டு தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே செய்தாய் ..

சுதா ரகுநாதன் , ஆண்ட்ரியா & ஷஹில் :ஏனோ ஏனோ..

rap..