படம் : மாஸ்கோவின் காவிரி
இசை : தமன்
பாடியவர்கள் : நவீன் , ராகுல் நம்பியார்
கவிஞர்: வைரமுத்து
கவிதை :
நீ ஒன்றும் அழகி இல்லை..
ஆனால் எனக்கு உன்னை போல் இன்னொருத்தி அழகில்லை..
நீ ஒன்றும் வெள்ளை இல்லை..
ஆனால் எனக்கு உன்னை போல் கண் கூசும் வண்ணமில்லை ..
நீ ஒன்றும் உயரமில்லை..
ஆனால் உன்னை அண்ணார்ந்து பார்த்த தலை தாழவில்லை..
நான் தூங்காமல் இருந்ததில்லை..
ஆனால் பெண்ணே அக்டோபர் ஏழு முதல் தூங்கவில்லை ..
பாடல் :
நீ ஒன்றும் அழகி இல்லை..
ஆனால் எனக்கு உன்னை போல் இன்னொருத்தி அழகில்லை..
நீ ஒன்றும் வெள்ளை இல்லை..
ஆனால் எனக்கு உன்னை போல் கண் கூசும் வண்ணமில்லை ..
நீ ஒன்றும் உயரமில்லை..
ஆனால் உன்னை அண்ணார்ந்து பார்த்த தலை தாழவில்லை..
நான் தூங்காமல் இருந்ததில்லை..
ஆனால் பெண்ணே அக்டோபர் ஏழு முதல் தூங்கவில்லை ..
வந்ததடி வந்ததடி வந்ததடி காதல் ..
சிந்துதடி சிந்துதடி சிந்துதடி சீவல் ..
(நீ ஒன்றும்..)
கண்ணை பரிக்குதடி கண்ணை பரிக்குதடி
நித்தம் ஒரு மில்லி மீட்டர் வளர்கின்ற அழகு ..
நெஞ்சை துளைக்குதடி நெஞ்சை துளைக்குதடி
முடிவிட்டு வைத்தாலும் முட்டுகின்ற நிலவு ..
உன் கவனம் எந்தன் மார்பு துளைக்க ..
மௌனம் எந்தன் முதுகு துளைக்க..
எங்ஙனம் எங்ஙனம் வாழுவது ?
இன்னும் எத்தனை முறை தான் சாகுவது ?
நிலவை தின்று அமுதம் குடிக்கும் அனுபவம் தானே காதல் ..
இல்லை நெருப்பை தின்று தண்ணீர் குடிக்கும் அனுபவம் தானா காதல் காதல் காதல் ?
வந்ததடி வந்ததடி வந்ததடி காதல் ..
சிந்துதடி சிந்துதடி சிந்துதடி சீவல் ..
உள்ளம் கருகுதடி உள்ளம் கருகுதடி
உன்னுடைய பிம்பங்கள் கண் மறையும் பொழுது ..
தொல்லை பெருகுதடி தொல்லை பெருகுதடி
துப்பட்டா சில சமயம் தோளில் பறக்கும் பொழுது ..
ஆயிரம் சொற்கள் நெஞ்சில் பிறக்க ..
ஒவ்வொரு சொல்லாய் உதடு எரிக்க ..
எங்ஙனம் எங்ஙனம் பேசுவது ?
நம் இடைவெளி எப்படி தீருவது ?
நிலவை தின்று அமுதம் குடிக்கும் அனுபவம் தானே காதல் ..
இல்லை நெருப்பை தின்று தண்ணீர் குடிக்கும் அனுபவம் தானா காதல் காதல் காதல் ?
வந்ததடி வந்ததடி வந்ததடி காதல் ..
சிந்துதடி சிந்துதடி சிந்துதடி சீவல் ..
(நீ ஒன்றும்..)
No comments:
Post a Comment