Sunday, October 31, 2010

மண்ணில் இந்த காதலன்றி

படம் : கேளடி கண்மணி
இசை :இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ ?
எண்ணம் கன்னி பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ ?
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா ?
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா !

வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி
சந்தனமும் சங்கத் தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்தி வரும் குங்குமமுதும் தங்கிடும் குமுதமும்
கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்
கன்னி துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசிய சுகம் தரும் அணங்கிவள் பிறப்பிது தான் !
(மண்ணில்..)

முத்து மணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
ஒத்து மலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றி வர செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணி விட மறந்தால் எதற்கோ பிறவி ?
இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி
முடி முதல் அடி வரை முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவள் அல்லவா ?
(மண்ணில்..)

No comments:

Post a Comment