Tuesday, December 21, 2010

விழி மூடி யோசித்தால்..

படம்: அயன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
கவிஞர்: நா.முத்துகுமார்
பாடியவர்: கார்த்திக்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய்
பெண்ணே பெண்ணே..
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா ?

மழைக் கிளியே மழைக் கிளியே
உன் கண்ணைக் கண்டேனே..
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே.. செந்தேனே ! (twice)

கடலாய்ப் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய்த் துளியாய் குறையும்..
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே..
தானாய் எந்தன் கால் இரண்டும்
உந்தன் திசையில் நடக்கும்..
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே..
இந்தக் காதல் வந்துவிட்டால்
நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடித் திரிந்திடுமே..

ஒ ..ஒ ..ஒ ..

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே..
தனியாகப் பேசிடும் சந்தோஷம் தந்தாய்
பெண்ணே பெண்ணே..
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா ?

மழைக் கிளியே மழைக் கிளியே
உன் கண்ணை கண்டேனே..
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே.. செந்தேனே !

ஆசை என்னும் தூண்டில் முள் தான்
மீனாய் நெஞ்சை இழுக்கும்..
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட
மனம் துடிக்கும்..
சுற்றும் பூமி என்னை விட்டு
தனியாய் சுற்றிப் பறக்கும்..
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ
புது மயக்கம்..
இது மாய வலை அல்லவா..
புது மோக நிலை அல்லவா..
உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னைப் பிடிக்கும்..

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே..
தனியாகப் பேசிடும் சந்தோஷம் தந்தாய்
பெண்ணே பெண்ணே..
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா ?

love the video as well..

செந்தாழம் பூவில்..

படம்: முள்ளும் மலரும்
இசை: இளையராஜா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா..
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா..
பூ வாசம் மேடை போடுதம்மா..
பெண்போல ஜாடை பேசுதம்மா..
அம்மம்மா ஆனந்தம்..
அம்மம்மா ஆனந்தம்!!

வளைந்து நெளிந்து போகும்பாதை
மங்கை மோகக் கூந்தலோ?
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ?
ஆலங்கொடி மேலே கிளி
தேன் கனிகளைத் தேடுது..
ஆசைக் குயில் பாஷை இன்றி
ராகம் என்ன பாடுது..
காடுகள் மலைகள் தேவன் கலைகள்!!

செந்தாழம்பூவில்..
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா..

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள்..
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூடப் பார்க்கிறாள்..
பள்ளம் சிலர் உள்ளம் என
ஏன் படைத்தான் ஆண்டவன்..
பட்டம் தரத் தேடுகின்றேன்
எங்கே அந்த நாயகன்?
மலையின் காட்சி இறைவன் ஆட்சி !

செந்தாழம்பூவில்..
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா..

இளைய பருவம் மலையில் வந்தால்
ஏகம் சொர்க்க சிந்தனை..
இதழில் வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை..
ஓடை தரும் வாடைக் காற்று
வான் உலகைக் காட்டுது..
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னைக் கூட்டுது..
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி !

செந்தாழம்பூவில்..
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா..
பூ வாசம் மேடை போடுதம்மா..
பெண்போல ஜாடை பேசுதம்மா..
அம்மம்மா ஆனந்தம் !
அம்மம்மா ஆனந்தம் !