Tuesday, December 21, 2010

செந்தாழம் பூவில்..

படம்: முள்ளும் மலரும்
இசை: இளையராஜா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா..
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா..
பூ வாசம் மேடை போடுதம்மா..
பெண்போல ஜாடை பேசுதம்மா..
அம்மம்மா ஆனந்தம்..
அம்மம்மா ஆனந்தம்!!

வளைந்து நெளிந்து போகும்பாதை
மங்கை மோகக் கூந்தலோ?
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ?
ஆலங்கொடி மேலே கிளி
தேன் கனிகளைத் தேடுது..
ஆசைக் குயில் பாஷை இன்றி
ராகம் என்ன பாடுது..
காடுகள் மலைகள் தேவன் கலைகள்!!

செந்தாழம்பூவில்..
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா..

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள்..
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூடப் பார்க்கிறாள்..
பள்ளம் சிலர் உள்ளம் என
ஏன் படைத்தான் ஆண்டவன்..
பட்டம் தரத் தேடுகின்றேன்
எங்கே அந்த நாயகன்?
மலையின் காட்சி இறைவன் ஆட்சி !

செந்தாழம்பூவில்..
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா..

இளைய பருவம் மலையில் வந்தால்
ஏகம் சொர்க்க சிந்தனை..
இதழில் வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை..
ஓடை தரும் வாடைக் காற்று
வான் உலகைக் காட்டுது..
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னைக் கூட்டுது..
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி !

செந்தாழம்பூவில்..
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா..
பூ வாசம் மேடை போடுதம்மா..
பெண்போல ஜாடை பேசுதம்மா..
அம்மம்மா ஆனந்தம் !
அம்மம்மா ஆனந்தம் !

No comments:

Post a Comment