படம்: சில்லுனு ஒரு காதல்
இசை : A . R . ரஹ்மான்
கவிஞர்: வாலி
பாடியவர் : A . R . ரஹ்மான்
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது .. பனியும் படர்ந்தது ..
இசை : A . R . ரஹ்மான்
கவிஞர்: வாலி
பாடியவர் : A . R . ரஹ்மான்
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது .. பனியும் படர்ந்தது ..
கப்பல் இறங்கியே காற்றும் தரையில் நடந்தது ..
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்..தனிமை தனிமையோ..??
தனிமை தனிமையோ.. கொடுமை கொடுமையோ .. ??
பேச்சினால் தாலாட்டு பாடி என்னை உறங்க வைக்க நீ இல்லை..
தினமும் ஒரு முத்தம் தந்து காலை coffee கொடுக்க நீ இல்லை ..
விழியில் விழும் தூசி தன்னை எடுக்க நீ இங்கு இல்லை ..
மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க நீ இங்கே இல்லை..
நான் இங்கே நீயும் அங்கே இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷம் ஆனதேனோ ???
வான் இங்கே நீலம் அங்கே இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ ???
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது .. பனியும் படர்ந்தது ..
கப்பல் இறங்கியே காற்றும் தரையில் நடந்தது ..
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்..தனிமை தனிமையோ..??
தனிமை தனிமையோ.. கொடுமை கொடுமையோ .. ??
நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா..
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரில் உள்ளதென்ன தேனா ??
சில்லென்று பூமி இருந்தும் இந்த தருணத்தில் குளிர் காலம் கோடை ஆனதேனோ ??
வா அன்பே நீயும் வந்தால் செந்தணல் கூட பனிக்கட்டி போல மாறுமே..
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது .. பனியும் படர்ந்தது ..
கப்பல் இறங்கியே காற்றும் தரையில் நடந்தது ..
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்..தனிமை தனிமையோ..??
தனிமை தனிமையோ.. கொடுமை கொடுமையோ .. ??
tranported back to our college days da.. back benches song discussion.. nice work
ReplyDelete