Friday, June 15, 2012

யாரோ இவளோ..

படம் : மாலை பொழுதின் மயக்கத்திலே
இசை : அச்சு
பாடியவர்: ஹரிசரண்
கவிஞர்: ரோஹிணி

யாரோ? இவளோ?
என் உயிரின் அலையிலே அலைந்து வந்த பெண்ணோ ..
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க ..

ஆஹா! அடடா!
இளம் சாரல் போல இங்கு தவழ்ந்து வந்த நிலவோ ..
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க ..

வருவாய் என பாதையிலே,
உன் மோகன இதழ்களை தீண்டிடவே,
இந்த மேகக் கூட்டமே, மோகத் தீயிலே,
மழையென பெய்கிறதோ ?

ஆண் இங்கு என்ன செய்தது ?
பெண் என்று உன்னை கொடுத்தது ..
ஏன் நெஞ்சம் படபடக்குது?

ஏன் இந்த நாணம் வந்தது?
ஏன் இன்று நீயும் சென்றது ?
ஏன் நெஞ்சம் துடிதுடிக்குதே..


யாரோ? இவளோ? என் உயிரின் அலையிலே அலைந்து வந்த பெண்ணோ ..
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க ..


ஆஹா அடடா இளம் சாரல் போல இங்கு தவழ்ந்து வந்த நிலவோ ..
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க ..

மழை பொழியும்..


படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
இசை : ஜி வி பிரகாஷ் குமார்
கவிஞர்: தாமரை
பாடியவர்கள்:ஆலாப் ராஜு, மேகா ,ஜி வி பிரகாஷ் குமார்


மழை பொழியும் மாலையில் மர நிழலின் சாலையில் அவள் நினைவில் போகையில் மனம் மயங்கி ஏதோ ஆக..
மழை பொழியும் மாலையில் மர நிழலின் சாலையில் அவள் நினைவில் போகையில் மனம் மயங்கி ஏதோ ஆகுதே!


என் கனாவில் உன்னை அழைத்து செல்கின்றேன்..
முன் சொல்லாத சில விருப்பம் சொல்கின்றேன்..
காதோரமாய் செந்தூரம்.. கரைந்து போகும் நம் தூரம் ..
இருவரும் ஒருவராய் மாறுவோம் இனி ....


(மழை பொழியும்)


நீ இல்லாமல் இந்த இரவும் விடியாது..
நீ வராமல் இந்த கனவும் முடியாது..
பூங்காற்றிலே கை கோர்த்து.. புதிய மண்ணில் தோள் சேர்த்து ..
போகிறோம் போகிறோம் பொங்குதே நிலா ....


(மழை பொழியும்)