Monday, September 16, 2013

ஒரு பாதி கதவு நீயடி

 

படம்: தாண்டவம்

இசை: ஜீ வீ பிரகாஷ் குமார்

பாடியவர்கள்: ஹரிசரண், வந்தனா ஸ்ரீனிவாசன்

கவிதை: நா. முத்துக்குமார்

 

நீ என்பதே நான் தானடி.. நான் என்பதே நாம் தானடி..

 

ஒரு பாதி கதவு நீயடி, மறு பாதி கதவு நானடி..

பார்த்துக் கொண்டே திறந்திருந்தோம்..

சேர்த்து வைக்கக் காத்திருந்தோம்..

 

ஒரு பாதி கதவு நீயடா, மறு பாதி கதவு நானடா..

தாள் திறந்தே காத்திருந்தோம்..

காற்று வீசப் பார்த்திருந்தோம்..

 

நீ என்பதே நான் தானடி.. நான் என்பதே நாம் தானடி..

 

ஒரு பாதி கதவு நீயடி, மறு பாதி கதவு நானடி….

 

இரவு வரும் திருட்டு பயம் கதவுகளை சேர்த்துவிடும்..

ஓ .. கதவுகளை திருடி விடும் அதிசயத்தைக் காதல் செய்யும்..

 

இரண்டும் கைகோர்த்து சேர்ந்தது.. இடையில் பொய் பூட்டு போனது..

வாசல் தள்ளாடுதே! திண்டாடுதே! கொண்டாடுதே!!

 

ஒரு பாதி கதவு நீயடி, மறு பாதி கதவு நானடி….

 

இடி இடித்தும், மழை அடித்தும்.. அசையாமல் நின்றிறுந்தோம்..

ஓ இன்றேனோ நம் மூச்சும் மென்காற்றில் இணைந்துவிட்டோம்..

 

இதயம் ஒன்றாக போனதே, கதவே இல்லாமல் ஆனதே,

இனிமேல் நம் வீட்டிலே பூங்காற்று தான் தினம் வீசுமே..

 

ஒரு பாதி கதவு நீயடி, மறு பாதி கதவு நானடி..

பார்த்துக் கொண்டே திறந்திருந்தோம்..

சேர்த்து வைக்கக் காத்திருந்தோம்..

 

ஒரு பாதி கதவு நீயடா, மறு பாதி கதவு நானடா..

தாள் திறந்தே காத்திருந்தோம்..

காற்று வீசப் பார்த்திருந்தோம்..

 

நீ என்பதே நான் தானடி.. நான் என்பதே நாம் தானடி..

பறக்கச் செய்வாய்..


படம்: அம்பிகாபதி (தமிழ்) रान्झाना-raanjhanaa (हिन्दी)
இசை : ஏ ஆர் ரஹ்மான்
கவிஞர்: வைரமுத்து
பாடியவர்  : கார்த்திக், மிலி நாயர்..

பெண்ணே உன்னை வெல்வது காதல் இல்லை..
என்னை உன்னில் தோற்பது காதல் ஆகும்!!
என்னை தோற்பதால் வெல்கிறேன்…..
ஆமாம்- பெண்ணே உன்னை வெல்வது காதல் இல்லை..
என்னை உன்னில் தோற்பது காதல் ஆகும்!!
என்னை தோற்பதால் வெல்கிறேன்…..

என் காதல்.. பூமி தொடாத தண்ணீர்..
நீதானே மழை நீரை உண்ணும் பறவை…

ஓ.. இரவை உண்ணும் ஒளி போலே-
என் இதயம் முற்றும் பருகிவிடு.. 
பறக்கச் செய்வாய்.. என்னை பறவை செய்வாய்..

சித்தம் சிதறுது தன்னாலே.. எத்தனை கனவுகள் உன்னாலே..
பறக்கச் செய்வாய்.. என்னை பறவை செய்வாய்..

உன் தோளில் நான் கண் தூங்கும் நாள் எப்போ..
பறக்கச் செய்வாய்.. என்னை பறவை செய்வாய்..
பறக்கச் செய்வாய் என்னை.. பறவை செய்வாய்..

பெண்ணே உன்னை வெல்வது காதல் இல்லை..
என்னை உன்னில் தோற்பது காதல் ஆகும்!!
என்னை தோற்பதால் வெல்கிறேன்…..
ஆமாம்- பெண்ணே உன்னை வெல்வது காதல் இல்லை..
என்னை உன்னில் தோற்பது காதல் ஆகும்!!
என்னை தோற்பதால் வெல்கிறேன்…..

யாரும் சொன்னால் நில்லாது காற்று..
அது போல் தான் என் காதல்..
நழுவும் மனது யார் சொல்லைக் கேட்கும்?
தடையாணை போடதே..

புண் படாமல் காயம் செய்த கத்தி வீசும் கண்கள்..
காயங்கள் காதல் ஞாயம்..

உயிர் தோழா நில்..
ஒரு வார்த்தை சொல்..

பெண்ணே உன்னை வெல்வது காதல் இல்லை..
என்னை உன்னில் தோற்பது காதல் ஆகும்!!
என்னை தோற்பதால் வெல்கிறேன்…..