Monday, September 16, 2013

பறக்கச் செய்வாய்..


படம்: அம்பிகாபதி (தமிழ்) रान्झाना-raanjhanaa (हिन्दी)
இசை : ஏ ஆர் ரஹ்மான்
கவிஞர்: வைரமுத்து
பாடியவர்  : கார்த்திக், மிலி நாயர்..

பெண்ணே உன்னை வெல்வது காதல் இல்லை..
என்னை உன்னில் தோற்பது காதல் ஆகும்!!
என்னை தோற்பதால் வெல்கிறேன்…..
ஆமாம்- பெண்ணே உன்னை வெல்வது காதல் இல்லை..
என்னை உன்னில் தோற்பது காதல் ஆகும்!!
என்னை தோற்பதால் வெல்கிறேன்…..

என் காதல்.. பூமி தொடாத தண்ணீர்..
நீதானே மழை நீரை உண்ணும் பறவை…

ஓ.. இரவை உண்ணும் ஒளி போலே-
என் இதயம் முற்றும் பருகிவிடு.. 
பறக்கச் செய்வாய்.. என்னை பறவை செய்வாய்..

சித்தம் சிதறுது தன்னாலே.. எத்தனை கனவுகள் உன்னாலே..
பறக்கச் செய்வாய்.. என்னை பறவை செய்வாய்..

உன் தோளில் நான் கண் தூங்கும் நாள் எப்போ..
பறக்கச் செய்வாய்.. என்னை பறவை செய்வாய்..
பறக்கச் செய்வாய் என்னை.. பறவை செய்வாய்..

பெண்ணே உன்னை வெல்வது காதல் இல்லை..
என்னை உன்னில் தோற்பது காதல் ஆகும்!!
என்னை தோற்பதால் வெல்கிறேன்…..
ஆமாம்- பெண்ணே உன்னை வெல்வது காதல் இல்லை..
என்னை உன்னில் தோற்பது காதல் ஆகும்!!
என்னை தோற்பதால் வெல்கிறேன்…..

யாரும் சொன்னால் நில்லாது காற்று..
அது போல் தான் என் காதல்..
நழுவும் மனது யார் சொல்லைக் கேட்கும்?
தடையாணை போடதே..

புண் படாமல் காயம் செய்த கத்தி வீசும் கண்கள்..
காயங்கள் காதல் ஞாயம்..

உயிர் தோழா நில்..
ஒரு வார்த்தை சொல்..

பெண்ணே உன்னை வெல்வது காதல் இல்லை..
என்னை உன்னில் தோற்பது காதல் ஆகும்!!
என்னை தோற்பதால் வெல்கிறேன்…..

No comments:

Post a Comment