Sunday, March 9, 2014

மணமகனின் சத்தியம்..

படம்: கோச்சடையான்

இசை: ஏ ஆர் ரஹ்மான்

வரிகள்: வைரமுத்து

பாடியவர்: ஹரிசரண்




கண்ணே கனியே.. உனைக் கைவிடமாட்டேன்..

சத்தியம் சத்தியம்.. இது சத்தியமே.. 

மாலை சூடியக் காலைக் கதிரின் மேலே..

சத்தியம் சத்தியம்.. இது சத்தியமே.. 



ஒரு குழந்தை போலே.. ஒரு வைரம் போலே.. 

தூய்மையான என் சத்தியம் புனிதமானது!!




இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன்.. 

பிரிதோர் பக்கம்; மனம் சாயாப் பிரியம் காப்பேன்..

செல்லக் கொலுசின் சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன்..

நெற்றிப் பொட்டில் முத்தம் பதித்து நித்தம் எழுவேன்..

கைப் பொருள் யாவையும் கரைத்தாலும் கணக்கு கேளேன்..

ஒவ்வொரு வாதம் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன்..




கண்ணே கனியே.. உனைக் கைவிடமாட்டேன்..

சத்தியம் சத்தியம்.. இது சத்தியமே.. 

மாலை சூடியக் காலைக் கதிரின் மேலே..

சத்தியம் சத்தியம்.. இது சத்தியமே.. 




அர்த்த ஜாமத் திருடன் போல அதிர்ந்து பேசேன்..

காமம் தீரும் பொழுதிலும் எந்தன் காதல் தீரேன்..

மாத மலர்ச்சி மறையும் வயதில் மார்பு கொடுப்பேன்..

நோய்நொடியோடு நீ விழுந்தால் தாய் மடியாவேன்... 


சுவாசம் போல அருகில் இருந்து சுகப்பட வைப்பேன்..

உந்தன் உறவை எந்தன் உறவாய் நெஞ்சில் சுமப்பேன்..

உன் கனவுகள் நிஜமாக எனையே தருவேன்..

உன் வாழ்வு மண்ணில் நீள என் உயிர் தருவேன்..





கண்ணே கனியே.. உனைக் கைவிடமாட்டேன்..

சத்தியம் சத்தியம்.. இது சத்தியமே.. 

மாலை சூடியக் காலைக் கதிரின் மேலே..

சத்தியம் சத்தியம்.. இது சத்தியமே.. 


ஒரு குழந்தை போலே.. ஒரு வைரம் போலே.. 

தூய்மையான என் சத்தியம் புனிதமானது!!


தூய்மையான என் சத்தியம் புனிதமானது!! 

தூய்மையான என் சத்தியம் புனிதமானது!!


Thursday, February 6, 2014

விழியே விழியே ... (Vizhiye Vizhiye.. )

படம்: இது கதிர்வேலன் காதல்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

வரிகள்: தாமரை

பாடியவர்: ஆலாப் ராஜு




விழியே விழியே திரை விரிகிறதே.. உனைப் பார்த்திடும் வேளையிலே..

அதிலே அதிலே படம் வரைகிறதே.. மனம் சேர்ந்திடும் ஆசைகளே..


கதிரவனாக திரிந்த பகல்.. நிலவென தேயவும் துணிந்ததடி..

கருநிறமாக இருந்த நிழல்.. உனதொரு பார்வையில் வெளுத்ததடி..


அன்பே உனைப் பார்ப்பதும் அனுபவமே.. உன்னால் உயிர் போவதும் சுகம் சுகமே.. (2)


விழியே விழியே திரை விரிகிறதே.. உனைப் பார்த்திடும் வேளையிலே..

அதிலே அதிலே படம் வரைகிறதே.. மனம் சேர்ந்திடும் ஆசைகளே..



எதை நீ சொன்னாலும் வியப்பேன்.. உன் அழகை கையேந்தி ரசிப்பேன்.. (2)

அடம் நீ செய்தாலும் பொறுப்பேன்.. உன் குரலை செல்போனில் பதிப்பேன்..

பொழுதும் உன்னோடு இருப்பேன்.. உன் சிரிப்பில் சோம்பல்கள் முறிப்பேன்..

எதை நீ சொன்னாலும் வியப்பேன்.. உன் அழகை கையேந்தி ரசிப்பேன்..



இலையும் தீண்டாத கனி நீ.. நான் சுவைக்கும் நாள் கிட்டும் பொறு நீ..

விரல்கள் மீட்டாத இசை நீ.. மெல்லிசையாய் என் காதல் வசம் நீ..

தவமே செய்யாத வரம் நீ.. பெண் கடலே முத்தங்கள் இடு நீ..

இலையும் தீண்டாத கனி நீ.. நான் சுவைக்கும் நாள் கிட்டும் பொறு நீ..



விழியே விழியே திரை விரிகிறதே.. உனைப் பார்த்திடும் வேளையிலே..

அதிலே அதிலே படம் வரைகிறதே.. மனம் சேர்ந்திடும் ஆசைகளே..


கதிரவனாக திரிந்த பகல்.. நிலவென தேயவும் துணிந்ததடி..

கருநிறமாக இருந்த நிழல்.. உனதொரு பார்வையில் வெளுத்ததடி..


அன்பே உனைப் பார்ப்பதும் அனுபவமே.. உன்னால் உயிர் போவதும் சுகம் சுகமே.. (2)