Thursday, February 6, 2014

விழியே விழியே ... (Vizhiye Vizhiye.. )

படம்: இது கதிர்வேலன் காதல்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

வரிகள்: தாமரை

பாடியவர்: ஆலாப் ராஜு




விழியே விழியே திரை விரிகிறதே.. உனைப் பார்த்திடும் வேளையிலே..

அதிலே அதிலே படம் வரைகிறதே.. மனம் சேர்ந்திடும் ஆசைகளே..


கதிரவனாக திரிந்த பகல்.. நிலவென தேயவும் துணிந்ததடி..

கருநிறமாக இருந்த நிழல்.. உனதொரு பார்வையில் வெளுத்ததடி..


அன்பே உனைப் பார்ப்பதும் அனுபவமே.. உன்னால் உயிர் போவதும் சுகம் சுகமே.. (2)


விழியே விழியே திரை விரிகிறதே.. உனைப் பார்த்திடும் வேளையிலே..

அதிலே அதிலே படம் வரைகிறதே.. மனம் சேர்ந்திடும் ஆசைகளே..



எதை நீ சொன்னாலும் வியப்பேன்.. உன் அழகை கையேந்தி ரசிப்பேன்.. (2)

அடம் நீ செய்தாலும் பொறுப்பேன்.. உன் குரலை செல்போனில் பதிப்பேன்..

பொழுதும் உன்னோடு இருப்பேன்.. உன் சிரிப்பில் சோம்பல்கள் முறிப்பேன்..

எதை நீ சொன்னாலும் வியப்பேன்.. உன் அழகை கையேந்தி ரசிப்பேன்..



இலையும் தீண்டாத கனி நீ.. நான் சுவைக்கும் நாள் கிட்டும் பொறு நீ..

விரல்கள் மீட்டாத இசை நீ.. மெல்லிசையாய் என் காதல் வசம் நீ..

தவமே செய்யாத வரம் நீ.. பெண் கடலே முத்தங்கள் இடு நீ..

இலையும் தீண்டாத கனி நீ.. நான் சுவைக்கும் நாள் கிட்டும் பொறு நீ..



விழியே விழியே திரை விரிகிறதே.. உனைப் பார்த்திடும் வேளையிலே..

அதிலே அதிலே படம் வரைகிறதே.. மனம் சேர்ந்திடும் ஆசைகளே..


கதிரவனாக திரிந்த பகல்.. நிலவென தேயவும் துணிந்ததடி..

கருநிறமாக இருந்த நிழல்.. உனதொரு பார்வையில் வெளுத்ததடி..


அன்பே உனைப் பார்ப்பதும் அனுபவமே.. உன்னால் உயிர் போவதும் சுகம் சுகமே.. (2)


No comments:

Post a Comment