ராசாளி..
படம் : அச்சம் என்பது மடமையடா (2016)
இசை : ரஹ்மான் AR
பாடியவர்கள் : சத்ய பிரகாஷ், ஷாஷா திருப்பதி
கவிஞர்: தாமரை
ஆ: பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு..
இங்கு நீ வேகமா? நான் வேகமா? சொல்லு ..
கடிகாரம் பொய் சொல்லும் என்றே நான் கண்டேன் ..
கிழக்கெல்லாம் மேற்காகிட..
கண்டேனே..
பெ: பறவை போல் ஆகினேன் போல் ஆகினேன் இன்று..
சிறகும் என் கைகளும் என் கைகளும் ஒன்று..
ஆ: ராசாளி.. பந்தயமா..? பந்தயமா ?
நீ முந்தியா நான் முந்தியா பார்ப்போம் .. பார்ப்போம்..
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை ?
முதலில் யார் எய்வது யார் எய்வதம்பை ?
மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல ..
வாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல..
கனவுகள் வருதே கண்ணின் வழியே..
என் தோள் மீது நீ..
நான் குளிர் காய்கின்ற தீ..
எட்டு திசை முட்டும் என்னை பகலினில்..
கொட்டும் பனி மட்டும் துணை இரவினில்..
நெட்டும் ஒரு பட்டு குரல் மனதினில்..
மடிவேனோ?
முன்னில் ஒரு காற்றின் களி முகத்தினில்..
பின்னில் சிறு பச்சை கிளி முதுகினில்..
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட..
விடுவேனோ?
ராசாளி .. பந்தயமா..? பந்தயமா ?
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை ?
முதலில் யார் எய்வது யார் எய்வதம்பை ?
பெ: வெயில் மழை வெட்கும்படி நனைவதை..
விண்மீன்களும் வீம்பாய் என்னை தொடர்வதை..
ஊருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை..
மறவேனே..
முன்னும் இது போலே புது அனுபவம்..
கண்டேன் என சொல்லும்படி நினைவில்லை..
இன்னும் எதிர் காலத்திலும் வழியில்லை..
மறவேனே..
ஆ: ராசாளி .. பந்தயமா..? பந்தயமா ?
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை ?
முதலில் யார் எய்வது யார் எய்வதம்பை ?
மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல ..
வாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல..
கனவுகள் வருதே கண்ணின் வழியே..
என் தோள் மீது நீ..
நான் குளிர் காய்கின்ற தீ..
என் தோள் மீது நீ..
நான் குளிர் காய்கின்ற தீ..
நான் குளிர் காய்கின்ற தீ..
நான் குளிர் காய்கின்ற தீ..
குளிர் காய்கின்ற தீ..
குளிர் காய்கின்ற தீ..
No comments:
Post a Comment