Friday, April 10, 2020

Life of Ram - கரை வந்த பிறகே (96)


படம் :  96 
இசை : கோவிந்த் வசந்தா     
பாடியவர்:  பிரதீப் குமார்   
கவிஞர்: கார்த்திக் நேத்தா 





கரை வந்த பிறகே.. பிடிக்குது கடலை..
நரை வந்த பிறகே.. புரியுது உலகை..

நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே..
இன்றை இப்போதை அர்த்தம் ஆக்குதே..
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே..
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே..

வாழா என் வாழ்வை வாழவே.. தாழாமல் மேலே போகிறேன் ..
தீரா உள் ஊற்றை தீண்டவே.. இன்றே இங்கே மீள்கிறேன்..
இங்கே இன்றே ஆழ்கிறேன்..


ஹே.. யாரோபோல் நான் என்னை பார்க்கிறேன்..
ஏதும் இல்லாமலே இயல்பாய்.. சுடர் போல் தெளிவாய்..
நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்..
கண்ணாடியாய் பிறந்தே காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன்..

இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா! 
எதிர் காணும் யாவுமே தீண்ட தூண்டும் அழகா...
நானே நானாய் இருப்பேன்.. நாளில் பூராய் வசிப்பேன்..
போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறுக்கிறேன்..
வாகாய் வாகாய் வாழ்கிறேன்..
பாகாய் பாகாய் ஆகிறேன்..      

தோ.. காற்றோடு வல்லூறு தான் போகுதே..  
பாதை இல்லாமலே அழகாய்.. நிகழே அதுவாய்..             
நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே..
ஓசை எல்லாம் துறந்தே.. காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன்..

திமிரேறி காளை மேல்  தூங்கும் காகமாய் பூமி மீது இருப்பேன்..
புவி போகும் போக்கில் கைகோர்த்து நானும் நடப்பேன்..
ஏதோ ஏகம் எழுதே.. ஆஹா ஆழம் தருதே..
தாய் போல் வாழும் கணமே ஆரோ பாடுதே..
ஆரோஆரிராரிரோ.. ஆரோஆரிராரிரோ..


கரை வந்த பிறகே.. பிடிக்குது கடலை ..
நரை வந்த பிறகே.. புரியுது உலகை..

நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே..
இன்றை இப்போதை அர்த்தம் ஆக்குதே..
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே..
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே..

தானே தானே நாணினே..
தானே தானே நாணினே.........

Tuesday, March 19, 2019

அன்பில் அவன்


அன்பில் அவன் சேர்த்த இதை..
 மனிதரே வெறுக்காதீர்கள்..
வேண்டும் என இணைத்த இதை..
 வீணாக மிதிக்கதிர்கள்..

உயிரே..
உன்னை உன்னை எந்தன்..
வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்..
இனிமேல்..
புயல் வெயில் மழை பாலை சோலை இவை..
ஒன்றாக கடப்போமே..

உன்னை தாண்டி எதையும் என்னால் யோசனை செய்ய
முடியாதே.. முடியாதே..

நீ வானவில்லாக.. அவள் வண்ணம் ஏழாக..
அந்த வானம் வீடாக மாறாதோ மாறாதோ..
(இனி) ஜோடி போட்டு தான் நீங்கள் போனாலே..
கண் பட்டு காய்ச்சல் தான் வாராதோ வாராதோ..   

உயிரே..
உன்னை உன்னை எந்தன்..
வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்..
இனிமேல்..
புயல் வெயில் மழை பாலை சோலை இவை..
ஒன்றாக கடப்போமே..


நீளும் இரவில் ஒரு பகலும்.. நீண்ட  பகலில் சில இரவும்..
கண்டுகொள்ளும் கலை அறிந்தோம்..
இன்று என்று அதை பயின்றோம்..

பூமி வானம் காற்று.. தீயை நீரை மாற்று..
புதிதாய் கொண்டு வந்து நீட்டு..  

நீ வானவில்லாக.. அவள் வண்ணம் ஏழாக..
அந்த வானம் வீடாக மாறாதோ மாறாதோ..
(இனி) ஜோடி போட்டு தான்.. நீங்கள் போனாலே..
கண் பட்டு காய்ச்சல் தான் வாராதோ வாராதோ..    

உயிரே..
உன்னை உன்னை எந்தன்..
வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்..
இனிமேல்..
புயல் வெயில் மழை பாலை சோலை இவை..
ஒன்றாக கடப்போமே..

உன்னை தாண்டி எதையும் என்னால் யோசனை செய்ய
முடியாதே முடியாதே..

நீ வானவில்லாக.. அவள் வண்ணம் ஏழாக..
அந்த வானம் வீடாக மாறாதோ மாறாதோ..
(இனி) ஜோடி போட்டு தான்.. நீங்கள் போனாலே..
கண் பட்டு காய்ச்சல் தான் வாராதோ வாராதோ..    

காதல் எல்லாம் தொலையும் இடம் கல்யாணம் தானே..
இன்று தொடங்கும் இந்த காதல் முடிவிலா வானே..!

Monday, June 20, 2016

ராசாளி.. Rasaali


ராசாளி..

படம் : அச்சம் என்பது மடமையடா (2016)
இசை : ரஹ்மான் AR 
பாடியவர்கள் : சத்ய பிரகாஷ், ஷாஷா திருப்பதி   
கவிஞர்: தாமரை 



ஆ: பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு..
இங்கு நீ வேகமா? நான் வேகமா? சொல்லு ..
கடிகாரம் பொய் சொல்லும் என்றே நான் கண்டேன் ..
கிழக்கெல்லாம் மேற்காகிட..
கண்டேனே..

பெ: பறவை போல் ஆகினேன் போல் ஆகினேன் இன்று..
சிறகும் என் கைகளும் என் கைகளும் ஒன்று..

ஆ: ராசாளி.. பந்தயமா..? பந்தயமா ?
நீ முந்தியா நான் முந்தியா பார்ப்போம் .. பார்ப்போம்..

முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை ?
முதலில் யார் எய்வது யார் எய்வதம்பை ?
மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல ..
வாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல..
கனவுகள் வருதே கண்ணின் வழியே..
என் தோள் மீது நீ..
நான் குளிர் காய்கின்ற தீ..

எட்டு திசை முட்டும் என்னை பகலினில்..
கொட்டும் பனி மட்டும் துணை இரவினில்..
நெட்டும் ஒரு பட்டு குரல் மனதினில்..
மடிவேனோ?
முன்னில் ஒரு காற்றின் களி முகத்தினில்..
பின்னில் சிறு பச்சை கிளி முதுகினில்..
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட..
விடுவேனோ?

ராசாளி .. பந்தயமா..? பந்தயமா ?
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை ?
முதலில் யார் எய்வது யார் எய்வதம்பை ?

பெ: வெயில் மழை வெட்கும்படி நனைவதை..
விண்மீன்களும் வீம்பாய் என்னை தொடர்வதை..
ஊருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை..
மறவேனே..
முன்னும் இது போலே புது அனுபவம்..
கண்டேன் என சொல்லும்படி நினைவில்லை..
இன்னும் எதிர் காலத்திலும் வழியில்லை.. 
மறவேனே..
   
ஆ: ராசாளி .. பந்தயமா..? பந்தயமா ?
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை ?
முதலில் யார் எய்வது யார் எய்வதம்பை ?
மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல ..
வாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல..
கனவுகள் வருதே கண்ணின் வழியே..
என் தோள் மீது நீ..
நான் குளிர் காய்கின்ற தீ..
என் தோள் மீது நீ..
நான் குளிர் காய்கின்ற தீ..
நான் குளிர் காய்கின்ற தீ..
குளிர் காய்கின்ற தீ..
குளிர் காய்கின்ற தீ..



Friday, June 17, 2016

அவளும் நானும்..

அவளும் நானும்..

படம் : அச்சம் என்பது மடமையடா (2016)
இசை : ரஹ்மான் AR 
பாடியவர் : விஜய் ஏசுதாஸ் 
கவிஞர்: பாவேந்தர் பாரதிதாசன்



அவளும் நானும்.. அமுதும் தமிழும்..
அவளும் நானும்.. அலையும் கடலும்..
அவளும் நானும்.. தவமும் அருளும்..
அவளும் நானும்.. வேரும் மரமும்..

ஆலும் நிழலும்.. அசைவும் நடிப்பும்..
அணியும் பணிவும்.. அவளும் நானும்..
அவையும் துணிவும்.. உழைப்பும் தழைப்பும்..
அவளும் நானும்..அளித்தலும் புகழும்..

மீனும் புனலும்..  விண்ணும் விரிவும்..
வெற்பும் தோற்றமும்.. வேலும் கூரும்..
ஆறும் கரையும்.. அம்பும் வில்லும்..
பாட்டும் உரையும்.. நானும் அவளும்..

நானும் அவளும்.. உயிரும் உடம்பும்..
நரம்பும் யாழும்.. பூவும் மணமும்..
நானும் அவளும்.. உயிரும் உடம்பும்..
நரம்பும் யாழும்.. பூவும் மணமும்..

அவளும் நானும்..தேனும் இனிப்பும்..
அவளும் நானும்..சிரிப்பும் மகிழ்வும்..
அவளும் நானும்..திங்களும் குளிரும்..
அவளும் நானும்..கதிரும் ஒளியும்..

 அவளும் நானும்.. அமுதும் தமிழும்..
அவளும் நானும்.. அலையும் கடலும்..
அவளும் நானும்.. தவமும் அருளும்..
அவளும் நானும்.. வேரும் மரமும்..

ஆலும் நிழலும்.. அசைவும் நடிப்பும்..
அணியும் பணிவும்.. அவளும் நானும்..
அவையும் துணிவும்.. உழைப்பும் தழைப்பும்..
அவளும் நானும்..அளித்தலும் புகழும்..

அவளும் நானும்.. அமுதும் தமிழும்..
அவளும் நானும்.. அமுதும் தமிழும்..

Saturday, February 6, 2016

Vellai kanavu (வெள்ளை கனவொன்று) - Mellisai

வெள்ளை கனவு

படம் : மெல்லிசை  (2015)
இசை : சாம் C S
பாடியவர்கள் : ஹரிஹரன் , ஹரிணி
கவிஞர்: ரஞ்சித் ஜெயக்கொடி


வெள்ளை கனவொன்று உள்ளே நுழைந்தது.. கண்கள் இருளதடி..
என்  மொத்த புலன்களும் மெல்ல எழுந்து வந்து எதோ சொல்லுதடி ..
(Humming: அடி பெண்ணே.. பெண்ணே..)
கண் முன்னே தேவதை .. உயிர் எங்கும் பெரும் வதை..

பேசி தீர்த்த பின்பும் பேச வார்த்தை இன்னும் தேடுதே ..
இனி பேச ஏதுமின்றி கேட்க ஏதுமின்றி தொடருதே ..

(Humming: அடி பெண்ணே.. பெண்ணே..)
கண் முன்னே தேவதை .. உயிர் எங்கும் பெரும் வதை..

வெள்ளை கனவொன்று உள்ளே நுழைந்தது .. கண்கள் இருளதடி..
என்  மொத்த புலன்களும் மெல்ல எழுந்து வந்து எதோ சொல்லுதடி...


மயக்கும் பார்வையில் பாதை மறந்தும் இந்த பயணம் தொடருதடி..
உன் மந்திர புன்னகையில் என் மனம் சொக்கி சொக்கி சொர்க்கம் தெரியுதடி..
புத்தம் புது மழை என்னை நனைத்ததே .. நெஞ்சம்  மட்டும் வேர்க்கும் மாயமென்ன ?
நித்தம் இந்த மழை என்னை நனைத்திட..ஏனோ உள்ளம் ஏங்கும் நியாமென்ன?

இரு கரங்களியிடையே  இருக்க இதமாகுதே ..
நீ விழுங்கும் சொற்கள் காதினோரம் கனமாகுதே..

(Humming: அடி பெண்ணே.. பெண்ணே..)
கண் முன்னே தேவதை .. உயிர் எங்கும் பெரும் வதை ..

உன் மூச்சு காற்று பட்டு ரோமக்கூட்டம் மொத்தம் சிலிர்க்குதே..
உன் தேகச்சூட்டில் என் உதடு கொஞ்சம் முத்தம் உதிர்க்குதே..

ஓ ஓ.. வெள்ளை கனவொன்று உள்ளே நுழைந்தது .. கண்கள் இருளதடி..
என்  மொத்த புலன்களும் மெல்ல எழுந்து வந்து எதோ சொல்லுதடி ..
Humming: அடி பெண்ணே.. பெண்ணே..

Wednesday, January 27, 2016

Mogathirai - மோகத்திரை - Pizza

மோகத்திரை

படம் : பீசா (2012)
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடியவர்: பிரதீப்
கவிஞர்: கபிலன்

உன் உயிர் அதன் இசை தேன் தரும் பூவின் நிழலோ ?

மோகத்திரை .. மூன்றாம் பிறை .. மூங்கில் மரம் முத்தம் தரும் ..
மோகத்திரை .. மூன்றாம் பிறை .. மூங்கில் மரம் முத்தம் தரும் ..


இமை விரல்களில் காற்றாய் கை வீசு ..
மலர் படுக்கையில் மௌனம் நீ பேசு.. காதலே ..
தனிமையில் ஒரு காதல் தாழ் போட்டு ..
இடைவெளியினில் என்னை நீ பூட்டு .. காதலே ..
தீண்டும் தினம் தென்றல் மனம் ..
கூந்தல் இழை வெந்நீர் மழை ..
உன் காதலால் என்னுள் நூறு கனா ...!!

உன் உயிர் அதன் இசை தேன் தரும் பூவின் நிழலோ ?
மோகத்திரை .. மூன்றாம் பிறை .. மூங்கில் மரம் முத்தம் தரும் ..
மோகத்திரை .. மூன்றாம் பிறை .. மூங்கில் மரம் முத்தம் தரும் ..

மேகம் இவன் .. தூறல் இவள் ..
நாட்கள் இவன் .. நேரம் இவள் ..
காற்று இவன் .. வாசம் இவள் ..
வார்த்தை இவன்.. அர்த்தம் இவள் ..

---------Music fades---------

Sunday, January 11, 2015

பூ அவிழும் பொழுதில் ..



படம்: எனக்குள் ஒருவன்
இசை: சந்தோஷ் நாராயணன்
வரிகள்: விவேக்
பாடியவர்: பிரதீப் குமார்

பூ அவிழும் பொழுதில் .. ஓர் ஆயிரம் கனா..
ஓர் கனவின் வழியில்.. அதே நிலா…
பால் சிரிப்பால் ஒளிப்பூ தெளித்தாள்..

தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே!
மேகம் கூடும் நேரம் பூ மழையே!

என் மூச்சுக் குழலிலே.. உன் பாடல் தவழுதே..
உண்டான இசையிலே.. உள் நெஞ்சம் நனையுதே.. (2)

வான் வெளி மீதே வெண்மதி தோன்றும்..
ஆண் வெளி மேலே அவள் உதித்தாளே..
வெண்சிறகேற்றாள் என் விரல் கோர்த்தாள்..
கண்களை மறைத்தே கனவுக்குள் இழுத்தாள்..

காலம் நேரம் மீறும் ஓர் நிலையே!
தேகம் தோறும் தூவும் பூ மழையே!

பூ அவிழும் பொழுதில் .. ஓர் ஆயிரம் கனா..
ஓர் கனவின் வழியில்.. அதே நிலா…
பால் சிரிப்பால் ஒளிப்பூ தெளித்தாள்..

தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே!
மேகம் கூடும் நேரம் பூமழையே!

என் மூச்சுக் குழலிலே.. உன் பாடல் தவழுதே..
உண்டான இசையிலே.. உள் நெஞ்சம் நனையுதே.. (2)