படம் : லேசா லேசா
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: யுகேந்திரன், திப்பு, மதுமிதா
கவிஞர்: நா. முத்துக்குமார்
பாடல் வரிகள் :
முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து விழியன் ஓரம் வழிந்தது இன்று!
முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து மழையைப் போலே பொழிந்தது இன்று !!
உயிர்க்குள் ஏதேதோ உணர்வு பூத்ததே, அழகு மின்னல் ஒன்று அடித்திட!
செவிக்குள் ஏதேதோ கவிதை கேட்குதே, இளையத் தென்றல் வந்து என்னை மெல்லத் தொட!!
(முதல் முதலாய்)
(இசை)
தீயும் நீயும் ஒன்றல்ல, எந்தத் தீயும் உன் போலச், சுடுவதில்லை, என்னைச் சுடுவதில்லை!
வேண்டாம் வேண்டாம் என்றாலும், விலகிப் போய் நான் நின்றாலும், விடுவதில்லை, காதல் விடுவதில்லை!!
(இசை)
இது ஒரு தலை உறவா, இல்லை இருவரின் வரவா,
என்றாலும் பாறையில் பூப் பூக்கும்!!
(முதல் முதலாய்)
(இசை)
மேற்குத் திக்கின் ஓரம் தான், வெயில் சாயும் நேரம் தான், நினைவு வரும் உந்தன் நினைவு வரும்!
உன்னை என்னை மெல்லத்தான், சேர்த்து வைத்துக் கொள்ளத்தான், நிலவு வரும், அந்தி நிலவு வரும்!!
அடி இளமையில் தனிமை, அது கொடுமையில் கொடுமை, என்னை அவதியில் விடுமோ, இந்த அழகிய பதுமை !
பெண்ணே என் காதலை காப்பாற்று!!
(முதல் முதலாய்)
can i post some song's lyrics ?
ReplyDeleteSure, we'll make it joint..
ReplyDelete