Saturday, December 29, 2012

வெளிச்சப் பூவே ..

படம்: எதிர்நீச்சல்

இசை: அனிருத்

பாடியவர்கள்: மோஹித் சவுஹான்,ஸ்ரேயா கோசல்

கவிதை: வாலி

 

ஓஹோ, மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே..

வா வா என் வெளிச்சப் பூவே வா..  (2)

 

உயிர் தீட்டும் உயிலே வா..

குளிர் நீக்கும் வெயிலே வா..

அழைத்தேன் வா அன்பே..

மழை மேகம் வரும் போதே,

மயில் தோகை விரியாதோ?

அழைத்தேன் வா அன்பே..

 

காதல் காதல் ஒரு ஜுரம், காலம் யாவும் அது வரும்..

ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை தொடர்கதை, அடங்கியதில்லையே.. (2)

 

ஹோ,ஜப்பானை விடுத்து எப்போது நடந்தாய்? கைகால்கள் முளைத்த ஹைக்கூவே..

ஹோ, ஜவ்வாது மனதை உன்மீது தெளிக்கும் ஹைக்கூவும் உனக்கொரு கைப்பூவே..

 

விலகாமல் கூடும் விழாக்கள் நாள்தோறும்..

ஹோ, பிரியாத மண்ணும்,புறாக்கள் தோள்சேரும்…

 

ஈச்சம் பூவே, தொடு தொடு.. கூச்சம் யாவும் விடு விடு..

ஏக்கம் தாக்கும் இளமையில் ஒரு இளமையில் தவிப்பது தகுமா?

 

ஹோ,மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே..

வா வா என் வெளிச்சப் பூவே வா..

 

ஓஹோ, மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே..

வா வா என் வெளிச்சப் பூவே வா..

 

உயிர் தீட்டும் உயிலே வா..

குளிர் நீக்கும் வெயிலே வா..

அழைத்தேன் வா அன்பே..

மழை மேகம் வரும் போதே,

மயில் தோகை விரியாதோ?

அழைத்தேன் வா அன்பே..

 

காதல் காதல் ஒரு ஜுரம், காலம் யாவும் அது வரும்..

ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை தொடர்கதை, அடங்கியதில்லையே.. (2)

Sunday, December 16, 2012

அடியே ..



படம் : கடல்
இசை : ஏ . ஆர் . ரஹ்மான்
பாடியவர்: சிட் ஸ்ரீராம்
கவிஞர்: கார்க்கி


மனசை தொறந்தாயே நீ ..
எங்கிருந்து வந்தாயோ நீ.. ?

அடியே .. அடியே ..
என்ன எங்க நீ கூட்டி போற ?
எங்க நீ கூட்டி போற ?

பள்ளம் குழி பாதை புரியல ..
உன்ன நம்பி வாறேன ..
இந்த காட்டு பய ஒரு ஆட்டு குட்டி போல
உன் பின்ன சுத்துறேனே ..


அடியே .. அடியே ..
என்ன எங்க நீ கூட்டி போற ?

விண்மீன தூக்கி இறக்க வரைஞ்ச ..
என் வானம் மேல வீசி எரிஞ்ச ..
பறக்க பழக்குறியே ..
எங்கிருந்து வந்தாயோ அடி ?


அடியே .. அடியே ..
என்ன எங்க நீ கூட்டி போற ?

கண்ணால கண்ணாடி செஞ்சி 
என் அச்சத்த காட்டுறியே ..
தூசி துரும்பெல்லாம் தட்டி 
உள்ளம் வெள்ளையடிக்கிறியே ..

 அடியே .. அடியே .. 
என்ன எங்க நீ கூட்டி போற ?

பூமி விட்டு சொர்க்கத்துக்கு 
நீ வானவில்லில் பாதை விரிச்ச..
மனச கயிறாக்கி இழுத்து போராயே நீ..

சொர்க்கம் விட்டு பூமி வந்தா ..
மீண்டும் கிழக்கில் சூரியன் வந்தா ..
நான் விழிச்சி பார்க்கையிலே.. 
கலைஞ்சி போவாயோ நீ ?

 அடியே .. அடியே .. 
என்ன எங்க நீ கூட்டி போற ?