Saturday, December 29, 2012

வெளிச்சப் பூவே ..

படம்: எதிர்நீச்சல்

இசை: அனிருத்

பாடியவர்கள்: மோஹித் சவுஹான்,ஸ்ரேயா கோசல்

கவிதை: வாலி

 

ஓஹோ, மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே..

வா வா என் வெளிச்சப் பூவே வா..  (2)

 

உயிர் தீட்டும் உயிலே வா..

குளிர் நீக்கும் வெயிலே வா..

அழைத்தேன் வா அன்பே..

மழை மேகம் வரும் போதே,

மயில் தோகை விரியாதோ?

அழைத்தேன் வா அன்பே..

 

காதல் காதல் ஒரு ஜுரம், காலம் யாவும் அது வரும்..

ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை தொடர்கதை, அடங்கியதில்லையே.. (2)

 

ஹோ,ஜப்பானை விடுத்து எப்போது நடந்தாய்? கைகால்கள் முளைத்த ஹைக்கூவே..

ஹோ, ஜவ்வாது மனதை உன்மீது தெளிக்கும் ஹைக்கூவும் உனக்கொரு கைப்பூவே..

 

விலகாமல் கூடும் விழாக்கள் நாள்தோறும்..

ஹோ, பிரியாத மண்ணும்,புறாக்கள் தோள்சேரும்…

 

ஈச்சம் பூவே, தொடு தொடு.. கூச்சம் யாவும் விடு விடு..

ஏக்கம் தாக்கும் இளமையில் ஒரு இளமையில் தவிப்பது தகுமா?

 

ஹோ,மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே..

வா வா என் வெளிச்சப் பூவே வா..

 

ஓஹோ, மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே..

வா வா என் வெளிச்சப் பூவே வா..

 

உயிர் தீட்டும் உயிலே வா..

குளிர் நீக்கும் வெயிலே வா..

அழைத்தேன் வா அன்பே..

மழை மேகம் வரும் போதே,

மயில் தோகை விரியாதோ?

அழைத்தேன் வா அன்பே..

 

காதல் காதல் ஒரு ஜுரம், காலம் யாவும் அது வரும்..

ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை தொடர்கதை, அடங்கியதில்லையே.. (2)

No comments:

Post a Comment