படம் : கடல்
இசை : ஏ . ஆர் . ரஹ்மான்
பாடியவர்: சிட் ஸ்ரீராம்
கவிஞர்: கார்க்கி
மனசை தொறந்தாயே நீ ..
எங்கிருந்து வந்தாயோ நீ.. ?
அடியே .. அடியே ..
என்ன எங்க நீ கூட்டி போற ?
எங்க நீ கூட்டி போற ?
பள்ளம் குழி பாதை புரியல ..
உன்ன நம்பி வாறேன ..
இந்த காட்டு பய ஒரு ஆட்டு குட்டி போல
உன் பின்ன சுத்துறேனே ..
அடியே .. அடியே ..
என்ன எங்க நீ கூட்டி போற ?
விண்மீன தூக்கி இறக்க வரைஞ்ச ..
என் வானம் மேல வீசி எரிஞ்ச ..
பறக்க பழக்குறியே ..
எங்கிருந்து வந்தாயோ அடி ?
அடியே .. அடியே ..
என்ன எங்க நீ கூட்டி போற ?
கண்ணால கண்ணாடி செஞ்சி
என் அச்சத்த காட்டுறியே ..
தூசி துரும்பெல்லாம் தட்டி
உள்ளம் வெள்ளையடிக்கிறியே ..
அடியே .. அடியே ..
என்ன எங்க நீ கூட்டி போற ?
பூமி விட்டு சொர்க்கத்துக்கு
நீ வானவில்லில் பாதை விரிச்ச..
மனச கயிறாக்கி இழுத்து போராயே நீ..
சொர்க்கம் விட்டு பூமி வந்தா ..
மீண்டும் கிழக்கில் சூரியன் வந்தா ..
நான் விழிச்சி பார்க்கையிலே..
கலைஞ்சி போவாயோ நீ ?
அடியே .. அடியே ..
என்ன எங்க நீ கூட்டி போற ?
No comments:
Post a Comment