Saturday, December 29, 2012

வெளிச்சப் பூவே ..

படம்: எதிர்நீச்சல்

இசை: அனிருத்

பாடியவர்கள்: மோஹித் சவுஹான்,ஸ்ரேயா கோசல்

கவிதை: வாலி

 

ஓஹோ, மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே..

வா வா என் வெளிச்சப் பூவே வா..  (2)

 

உயிர் தீட்டும் உயிலே வா..

குளிர் நீக்கும் வெயிலே வா..

அழைத்தேன் வா அன்பே..

மழை மேகம் வரும் போதே,

மயில் தோகை விரியாதோ?

அழைத்தேன் வா அன்பே..

 

காதல் காதல் ஒரு ஜுரம், காலம் யாவும் அது வரும்..

ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை தொடர்கதை, அடங்கியதில்லையே.. (2)

 

ஹோ,ஜப்பானை விடுத்து எப்போது நடந்தாய்? கைகால்கள் முளைத்த ஹைக்கூவே..

ஹோ, ஜவ்வாது மனதை உன்மீது தெளிக்கும் ஹைக்கூவும் உனக்கொரு கைப்பூவே..

 

விலகாமல் கூடும் விழாக்கள் நாள்தோறும்..

ஹோ, பிரியாத மண்ணும்,புறாக்கள் தோள்சேரும்…

 

ஈச்சம் பூவே, தொடு தொடு.. கூச்சம் யாவும் விடு விடு..

ஏக்கம் தாக்கும் இளமையில் ஒரு இளமையில் தவிப்பது தகுமா?

 

ஹோ,மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே..

வா வா என் வெளிச்சப் பூவே வா..

 

ஓஹோ, மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே..

வா வா என் வெளிச்சப் பூவே வா..

 

உயிர் தீட்டும் உயிலே வா..

குளிர் நீக்கும் வெயிலே வா..

அழைத்தேன் வா அன்பே..

மழை மேகம் வரும் போதே,

மயில் தோகை விரியாதோ?

அழைத்தேன் வா அன்பே..

 

காதல் காதல் ஒரு ஜுரம், காலம் யாவும் அது வரும்..

ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை தொடர்கதை, அடங்கியதில்லையே.. (2)

Sunday, December 16, 2012

அடியே ..



படம் : கடல்
இசை : ஏ . ஆர் . ரஹ்மான்
பாடியவர்: சிட் ஸ்ரீராம்
கவிஞர்: கார்க்கி


மனசை தொறந்தாயே நீ ..
எங்கிருந்து வந்தாயோ நீ.. ?

அடியே .. அடியே ..
என்ன எங்க நீ கூட்டி போற ?
எங்க நீ கூட்டி போற ?

பள்ளம் குழி பாதை புரியல ..
உன்ன நம்பி வாறேன ..
இந்த காட்டு பய ஒரு ஆட்டு குட்டி போல
உன் பின்ன சுத்துறேனே ..


அடியே .. அடியே ..
என்ன எங்க நீ கூட்டி போற ?

விண்மீன தூக்கி இறக்க வரைஞ்ச ..
என் வானம் மேல வீசி எரிஞ்ச ..
பறக்க பழக்குறியே ..
எங்கிருந்து வந்தாயோ அடி ?


அடியே .. அடியே ..
என்ன எங்க நீ கூட்டி போற ?

கண்ணால கண்ணாடி செஞ்சி 
என் அச்சத்த காட்டுறியே ..
தூசி துரும்பெல்லாம் தட்டி 
உள்ளம் வெள்ளையடிக்கிறியே ..

 அடியே .. அடியே .. 
என்ன எங்க நீ கூட்டி போற ?

பூமி விட்டு சொர்க்கத்துக்கு 
நீ வானவில்லில் பாதை விரிச்ச..
மனச கயிறாக்கி இழுத்து போராயே நீ..

சொர்க்கம் விட்டு பூமி வந்தா ..
மீண்டும் கிழக்கில் சூரியன் வந்தா ..
நான் விழிச்சி பார்க்கையிலே.. 
கலைஞ்சி போவாயோ நீ ?

 அடியே .. அடியே .. 
என்ன எங்க நீ கூட்டி போற ?



Monday, August 13, 2012

கால் முளைத்த பூவே..

படம்: மாற்றான்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
எழுதியவர்: மதன் கார்கி
பாடியவர்கள்: ஜாவேத் அலி, மஹாலக்ஷ்மி ஐயர், நின்சி வின்சென்ட்



கால் முளைத்த பூவே.. என்னோடு Ballet ஆட வா வா !
Volga நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா ! 

Camomile பூவின் வாசமதை உன் இதழ்களில் கண்டேனே!
Soviet ஓவியக் கவிதைகளை உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்!

அசையும் அசைவில் மனதைப் பிசைய,
இதய இடுக்கில் மழையைப் பொழிய,
உயிரை உரசி அனலை எழுப்ப,
எரியும் வெறியைத் தெரித்தாய்!

வால் முளைத்த காற்றே.. என்னோடு Ballet ஆட வா வா!
Volga நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா ! 



நிலவுகள் தலைகள் குனிந்ததே ..
மலர்களின் மமதை அழிந்ததே..
கடவுளின் கடமை முடிந்ததே..
அழகி நீ பிறந்த நொடியிலே!

தலைகள் குனிந்ததோ? மமதை அழிந்ததோ?
கடமை முடிந்ததோ? பிறந்த நொடியிலோ?

ஏ பெண்ணே.. ஏ பெண்ணே..
உன் வளைவுகளில் தொலைவது போலே உணருகிறேன்..
இடையினிலே திணறுகிறேன்.. கனவிது தானா? வினவுகிறேன்!


கால் முளைத்த பூவே.. என்னோடு Ballet ஆட வா வா !
Volga நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா !




இரவினில் நிலவு எரிகையில், திரிகளாய் விரல்கள் திரிவதேன்?
அருகினில் நெருங்கி வருகையில், விலகியே ஒழுக்கம் உருகுதே..

நிலவு எரிகையில், விரல்கள் திரிந்ததோ?
நெருங்கி வருகையில், ஒழுக்கம் உருகுதோ?

ஓ ஏனேனோ, எனை ஏனோ, உருக்குகிறாய்..
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்..
இடைவெளியை சுருக்கிகிறாய்,
இரக்கமே இன்றி இறுக்குகிறாய்!


கால் முளைத்த பூவே.. என்னோடு Ballet ஆட வா வா !
Volga நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா ! 

Camomile பூவின் வாசமதை உன் இதழ்களில் கண்டேனே!
Soviet ஓவியக் கவிதைகளை உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்!

அசையும் அசைவில் மனதைப் பிசைய,
இதய இடுக்கில் மழையைப் பொழிய,
உயிரை உரசி அனலை எழுப்ப,
எரியும் வெறியைத் தெறித்தாய்!

Friday, June 15, 2012

யாரோ இவளோ..

படம் : மாலை பொழுதின் மயக்கத்திலே
இசை : அச்சு
பாடியவர்: ஹரிசரண்
கவிஞர்: ரோஹிணி

யாரோ? இவளோ?
என் உயிரின் அலையிலே அலைந்து வந்த பெண்ணோ ..
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க ..

ஆஹா! அடடா!
இளம் சாரல் போல இங்கு தவழ்ந்து வந்த நிலவோ ..
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க ..

வருவாய் என பாதையிலே,
உன் மோகன இதழ்களை தீண்டிடவே,
இந்த மேகக் கூட்டமே, மோகத் தீயிலே,
மழையென பெய்கிறதோ ?

ஆண் இங்கு என்ன செய்தது ?
பெண் என்று உன்னை கொடுத்தது ..
ஏன் நெஞ்சம் படபடக்குது?

ஏன் இந்த நாணம் வந்தது?
ஏன் இன்று நீயும் சென்றது ?
ஏன் நெஞ்சம் துடிதுடிக்குதே..


யாரோ? இவளோ? என் உயிரின் அலையிலே அலைந்து வந்த பெண்ணோ ..
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க ..


ஆஹா அடடா இளம் சாரல் போல இங்கு தவழ்ந்து வந்த நிலவோ ..
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க ..

மழை பொழியும்..


படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
இசை : ஜி வி பிரகாஷ் குமார்
கவிஞர்: தாமரை
பாடியவர்கள்:ஆலாப் ராஜு, மேகா ,ஜி வி பிரகாஷ் குமார்


மழை பொழியும் மாலையில் மர நிழலின் சாலையில் அவள் நினைவில் போகையில் மனம் மயங்கி ஏதோ ஆக..
மழை பொழியும் மாலையில் மர நிழலின் சாலையில் அவள் நினைவில் போகையில் மனம் மயங்கி ஏதோ ஆகுதே!


என் கனாவில் உன்னை அழைத்து செல்கின்றேன்..
முன் சொல்லாத சில விருப்பம் சொல்கின்றேன்..
காதோரமாய் செந்தூரம்.. கரைந்து போகும் நம் தூரம் ..
இருவரும் ஒருவராய் மாறுவோம் இனி ....


(மழை பொழியும்)


நீ இல்லாமல் இந்த இரவும் விடியாது..
நீ வராமல் இந்த கனவும் முடியாது..
பூங்காற்றிலே கை கோர்த்து.. புதிய மண்ணில் தோள் சேர்த்து ..
போகிறோம் போகிறோம் பொங்குதே நிலா ....


(மழை பொழியும்)

Saturday, March 31, 2012

நேரத்தின் நேரம் எல்லாம்..



படம் : மாலை பொழுதின் மயக்கத்திலே
இசை : அச்சு
பாடியவர்: நாராயண் நாகேந்திர ராவ்,அச்சு
கவிஞர்: ரோஹிணி



நேரத்தின் நேரம் எல்லாம்..
உன்னை பார்த்த மூர்ச்சையுடன்.. காற்றின் சுவாசம் இங்கு.. உன்னை தொட மாயம் செய்தேன் ..
கனவும் .. இதை போல் காட்சி எங்கும் கண்டதில்லை..
என்று சொல்லி ரசிக்க ..
போராட்டம் என்று சொல்லி.. அர்த்தம் நானும் தெரிந்துகொள்ள ..
போரின் வாளை போலே .. உந்தன் கண்கள் என்னை கொல்ல ..
அடடா .. வலி கூட சுகம் என்று ..
சுகம் என்று சொன்னேன் ..
என்னவோ ??


Tuesday, January 3, 2012

பாதகத்தி கண்ணு பட்டு..

படம் : கழுகு
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா
கவிஞர்: சிநேகன்

பாடல் வரிகள் :

பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா..ச்சு நெஞ்சு..
பாறாங்கல்லு இறக்க கட்டி பறக்குதடி எடை குறைஞ்சு..
பட்ட மரம் ஒன்னு பொசுக்குனு துளிர்க்குதே.. 
நீ சிரிக்கும் போது என் மனசு வழுக்குதே ..
உன்கிட்ட கெஞ்ச .. என்னோட நெஞ்ச .. என்னடி செஞ்ச  .. 
சொல்லு சொல்லு ..
காதல சொன்னேன் .. கற்பூர கண்ணே.. என்னடி பண்ண ..
சொல்லு சொல்லு ..
பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா..ச்சு நெஞ்சு..

மனசு முழுக்க ஆசை..என்னடி நானும் பேச ..
நாக்கு குள்ள கூச.. தடுமாறி போனேன் ..
காணாத கானகத்தில் அலைஞ்சி திரிஞ்சேன் நானும் தான் ..
காத்தாக என்னை  உரசி சாச்சிபுட்ட நீயும் தான் ..
உள்ளங்கால் நிழலாட்டம் நிழலாட்டம் ஒட்டிகிட்டேன் நான் ..
உன் பேர உசுரு மேல உசுரு மேல வெட்டிகிட்டேன் நான் ..  
பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா..ச்சு நெஞ்சு..

அழுக்கா கெடந்த மனச.. நீ எறங்கி அலச ..
மறந்து நிக்கிறன் பழச .. புரியாம தானே !
ஆகாயம் தாண்டி எங்கோ பறந்து போறேன் நானும் தான் ..
அங்கேயும் உன் நினப்ப அனுப்பி வெக்கிற நீயும் தான் ..
நீ பார்த்த செடி போல செடி போல தலையும் ஆடுதே ..
உன் கூட நதி போல நதி போல காலும் ஓடுதே ..

பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா..ச்சு நெஞ்சு.. 
பாறாங்கல்லு இறக்க கட்டி பறக்குதடி எடை குறைஞ்சு..
பட்ட மரம் ஒன்னு பொசுக்குனு துளிர்க்குதே.. 
நீ சிரிக்கும் போது என் மனசு  வழுக்குதே ..
உன்கிட்ட கெஞ்ச .. என்னடி செஞ்ச..என்னோட நெஞ்ச சொல்லு ..
காதல சொன்னேன் .. கற்பூர  கண்ணே .. என்னடி பண்ண ..
 சொல்லு சொல்லு ..